1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

கடந்த காலங்களில் கட்சிகளை

பிரித்து தேர்தலில் வெற்றி பெற முடிந்தது ஆனால் தற்போது அவ்வாறு வெற்றிபெற முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர்  நாமல் ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.

கட்சிகளை பிரித்து தேர்தலில் வெற்றி பெறுவது காலாவதியான உத்தி என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

2019ஆம் ஆண்டு கட்சி பிளவுபட்டதன் மூலம் ஐக்கிய தேசியக் கட்சிக்கு பரம்பரையாக ஏற்பட்டுள்ள அதீத தோல்வி குறித்து சிந்திக்க வேண்டும் எனவும் கட்சி பிளவுபட்டால் தேர்தல் தோல்வியை நிச்சயம் சந்திக்க நேரிடும் எனவும் நாமல் ராஜபக.க்ஷ தெரிவித்தார்.

பிளவு காரணமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் உடைந்துள்ளதாகவும் நாமல் ராஜபக்க்ஷ கூறுகிறார்.

கட்சிகளை பிளவுபடுத்துவது அல்ல, ஒன்றுபட்டு வலுவாக நிற்பதுதனையே நாம் செய்ய வேண்டும் என நாமல் ராஜபக்க்ஷ வலியுறுத்துயுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி