ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க
நிச்சயம் போட்டியிடுவார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும், காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகருமான ருவான் விஜயவர்தன இன்று (06) காலியில் அறிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவாரா இல்லையா என்பதில் மக்கள் மத்தியில் குழப்பம் நிலவுகிறது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எமது தலைவர் ரணில் விக்கிரமசிங்க நிச்சயமாக போட்டியிடுவார் என ருவான் விஜயவர்தன தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் காலி மாவட்ட மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தனவினால் இந்த மாநாடு காலியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.