குருணாகல் மாவட்ட பாராளுமன்ற
உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இன்று மருதானை பொலிஸில் முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்துள்ளார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்துக்குள் செல்ல தமக்கு இடையூறு ஏற்படுத்தியமை தொடர்பிலேயே அவர் இந்த முறைப்பாட்டை செய்துள்ளார்.
நேற்றுக் காலை தயாசிறி ஜயசேகர தலைமையகத்துக்குச் சென்ற போதும் பொலிஸார் அவரை உள்ளே செல்ல அனுமதிக்காததால், தலைமையகத்துக்கு முன்பாக ஆவணங்களில் கையொப்பமிட்டுள்ளார்.
அவர் கட்சியின் வழக்கமான செயலாளர் என்று குறிப்பிட்டார்.