இந்த வருடம் நடைபெறவுள்ள
ஜனாதிபதி தேர்தலில் ஒரு கோடியே எழுபது இலட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
2024ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் ஜனாதிபதித் தேர்தலுக்குப் பயன்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
ஜூலை முதலாம் திகதி முதல் ஆவணம் சான்றளிக்கப்பட்டுள்ளதாக ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
கடந்த 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்களின் எண்ணிக்கையை விட சுமார் 10 இலட்சம் வாக்காளர்கள் இந்த ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.