கதிர்காமம் மெனிக் கங்கையில்
நீராடிய ஒருவர் முதலையின் தாக்குதலுக்கு இலக்காகி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மெனிக் கங்கையில் நீராடிக் கொண்டிருந்தபோது இவர் முதலையின் தாக்குதலுக்கு இலக்காகி நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. இவர் கதிர்காமம் விஹாரைக்கு மத கடமைக்காக வந்தவர் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.