இரத்தினபுரி ஹொரண
முனகமவில் இரண்டு மாடி வீடு ஒன்றில் 9 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் திருடப்பட்டுள்ளதாக ஹொரணை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
திருடப்பட்ட பொருட்களில் 6 தங்க மோதிரங்கள், 2 பதக்கங்கள், 1 வளையல் மற்றும் 1 ஜோடி காதணிகள் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருட்டு இடம்பெற்றபோது, இரண்டு மாடிகளைக் கொண்ட அந்த வீட்டின் மேல்மாடியில் மாவட்ட அரசாங்க அதிபரும் குடும்பத்தினரும் உறங்கிக் கொண்டிருந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.