1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

சிஐடி என்னை இருக்க விடுகிறார்கள்

இல்லை.நான் எனது மன சுதந்திரத்தை இழந்துவிட்டேன்” என்று மொடல் அழகி பியுமி ஹன்சமாலி தனது பேஸ்புக் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

வேண்டுமென்றே போதைப்பொருள் சம்பவத்தில் தன்னை ஈடுபடுத்தும் விளையாட்டு இது என்றும், இந்த கேடுகெட்ட வேலைக்காக தான் சாபம் விடுவதாகவும்  கூறியுள்ளார்.

காரை விற்று ஒரு வருடம் ஆவதாகவும், கைதானவரின் மனைவி பழைய தோழி என்றும் கூறிய அவர், நட்பு காரணமாக இருமுறை 50 லட்சம் கொடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வாகனத்துக்காக பாதிப் பணத்தைக் கொடுத்ததாகவும் அதனால் வாகனம் இன்னும் தன் பெயரில் இருப்பதாகவும் பியுமி ஹன்சமாலி தெரிவித்துள்ளார்.

தான் கூறுவது 100 வீதம்  சரி என்றும், சம்பவத்துடன் தொடர்புடைய வாகனத்தில் போதைப்பொருள் கடத்தப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி