மூன்று வயதுடைய குழந்தை
ஒன்று வீட்டின் தண்ணீர் தொட்டியில் வீழ்ந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக மித்தெனிய பொலிஸார் தெரிவித்தனர்.
கிழக்கு மித்தெனிய முகவரியில் வசித்து வந்த சமரகோன் முதியன்சே என்பவரின் புதல்வரான அயன் கோவிஜா என்பவரே உயிரிழந்துள்ளார்.
தனது ஒன்பது வயது பிள்ளையின் உடலைக் கழுவிய தாய் அதனுடன் வீட்டுக்குள் சென்றபோது, சிறு குழந்தை தண்ணீர் தொட்டிக்கு அருகில் இருந்தது.
ஆனால், திரும்பி வந்து பார்த்தபோது குழந்தை தண்ணீர் தாங்கிக்குள் வீழ்ந்து கிடப்பதைக் கண்டு அதனை மீட்டு மித்தெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
மித்தெனிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குழந்தை உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.