ஜனாதிபதியின் பதவிக் காலம்
தொடர்பில் விளக்கமளிக்கும் வரை ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதைத் தடுக்க உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் ஒரு இலட்சம் ரூபா நீதிமன்றக் கட்டணத்துடன் நிராகரிக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
மேலும் ஒரு மாதத்துக்குள் நீதிமன்ற கட்டணத்தை செலுத்த மனுதாரருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
தொழிலதிபர் சி. டி. லெனவாவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது