அதுருகிரிய நகரில் துப்பாக்கிச்
சூடு நடத்த வந்தவர்கள் பயணித்ததாகச் சந்தேகிக்கப்படும் கார் கடுவெல, கொரதொட்ட பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதுருகிரி நகரில் அழகு நிலையம் திறப்பு விழாவின்போது இன்று (08) காலை காரில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
கிளப் வசந்த என்றழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேரா என்ற 55 வயதுடைய பிரபல வர்த்தகரும், 38 வயதுடைய நபரும் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் பிரபல பாடகர் கே சுஜீவாவும் காயமடைந்தார், மேலும் இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் காயமடைந்தனர்.
படுகாயமடைந்த ஒரு பெண்ணும் ஆண் ஒருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும், ஏனைய பெண்கள் ஹோமாகம வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.