சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல
கோரிக்கைகளை முன்வைத்து அரச ஊழியர்கள் இன்று (8) ஆரம்பித்த சுகயீன லீவு தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக பல அரச நிறுவனங்களின் பணிகள் முற்றாக பாதிக்கப்பட்டன.
இந்தப் பணிப்பகிஷ்கரிப்புடன் இன்று பகல் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக அரச ஊழியர்கள் குழு கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தியது.
'நிர்வாகம் அல்லாத அனைத்து அரசு ஊழியர்களுக்கும் 25,000 ரூபா கொடுப்பனவு வழங்கல், நிர்வாக சேவை அதிகாரிகளின் சம்பள முரண்பாடுகளை களைதல் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.