1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

இன்றும் (8) நாளையும் (9) தபால்

ரயில் சேவைகள் வழமை போன்று இயங்கும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்த போதிலும் தபால் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக தபால் பெட்டிகள் குறித்த ரயில்களிலிருந்து அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை மற்றும் காலி வரை இயங்கும் இரண்டு இரவு தபால் ரயில்களில் இரண்டு தபால் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன, 
 
மேலும் இந்த தபால் பெட்டிகள் கடிதங்கள், பார்சல்கள் மற்றும் கடிதப் பொதிகளை வரிசைப்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளன.
 
பதுளை இரவு ரயில் கொழும்பு கோட்டையிலிருந்து இரவு 8.30 மணிக்கும் காலிக்கான ரயில் மாலை 6.45 மணிக்கும் புறப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி