ஒரு கெப்டனின் திறமையை
அமைதியான கடலில் அல்ல, புயலில்தான் அங்கீகரிக்க முடியும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.
இந்தக் கூற்று உண்மையான தலைவருக்குப் பொருந்தும் என்று அவர் கூறியுள்ளார்
"இருண்ட யுகத்துக்குப் பிறகு ஜனநாயகத்தை போற்றும் காலம் உருவாகி வருகிறது. சவால்களை கண்டு தப்பி ஓடிய தலைவர்கள் அரங்குக்கு வந்து விசித்திரக் கதைகள் கூறுகிறார்கள்.
களுத்துறையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி, தம்மை முன்னோக்கி கொண்டு செல்லும் தலைவர்களுக்கு முன்னால் மாத்திரம் நிற்குமாறு மக்கள் கேட்டுக் கொள்கின்றனர்.