அதுருகிரி நகருக்கு அருகில்
நேற்று (08) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் அதுருகிரி பச்சை குத்தும் நிலையத்தின் உரிமையாளர் உட்பட 6 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்களின் வாக்குமூலங்களை பதிவு செய்த பின்னர்அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று காலை பச்சை குத்தும் நிலையத்தை திறக்க வந்தபோது துப்பாக்கி சூடு நடந்தது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் தொழிலதிபர் வசந்த சுரேந்திரா என்ற கிளப் வசந்த மற்றும் மற்றொரு நபரும் உயிரிழந்தனர்.
பிரபல பாடகர் கே. சுஜீவா, வசந்த சுரேந்திராவின் மனைவி மற்றும் நான்கு பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.