நிவித்திகல, வட்டபொட பிரதேசத்தில்
இறப்பர் தோட்டத்துக்கு அருகில் உள்ள நடைபாதையில் முகத்தில் இரத்தக் காயங்களுடன் 16 வயதுடைய பாடசாலை மாணவி சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக நிவித்திகல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவர் வட்டபொட பிரதேசத்தில் வசிக்கும் 16 வயதுடைய பாடசாலை மாணவி என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சிறுமியின் தாயார் கோவிலுக்கு அருகில் கடை நடத்தி வருவதாகவும் சம்பவ தினத்தன்று சிறுமி பாடசாலைக்குச் செல்லாததால் வீட்டில் தனியாக இருந்ததாகவும் தாயாரும் கடைக்கு வருமாறு தொலைபேசியில் அழைப்பு விடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர் .
அப்போது, சிறுமி வருவதில் தாமதம் ஏற்பட்டதால், கடையில் இருந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த தாய், ரப்பர் தோட்டத்தின் நடுவே உள்ள நடைபாதையில் சென்று கொண்டிருந்தபோது சந்தேகத்துக்கிடமான முறையில் சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.