1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல்

தொடர்பில் கலந்துரையாடுவதற்காக பொலிஸ் மா அதிபர், தபால் மா அதிபர் மற்றும் அரசாங்க அழுத்தகர் ஆகியோர் இன்று (9) தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். 

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உரிய தரப்பினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 

இதன்படி, அரசாங்க அழுத்தகர் மற்றும் தபால் மா அதிபர் ஆகியோர் இன்று (9) தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வருகை தரவுள்ள நிலையில், பொலிஸ் மா அதிபர் எதிர்வரும் நாட்களில் வரவுள்ளார்.

அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஜூலை 17ஆம் திகதிக்குப் பின்னர் ஜனாதிபதித் தேர்தலை அறிவிக்க தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது.

இந்நிலையே, இந்த சந்திப்பின்போது ஜனாதிபதி தேர்தலை நடத்துவது தொடர்பான அடிப்படை விடயங்கள் குறித்து கலந்துரையாடவுள்ளதாக ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தேர்தல் செலவுகளை ஒழுங்குமுறை சட்டத்தை அமுல்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க அறிவித்துள்ளார். 

இந்தச் சட்டம் ஒவ்வொரு வேட்பாளரும் செலவிடும் பணத்தின் அளவைக் கட்டுப்படுத்தும். மேலும், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் செலுத்த வேண்டிய தேர்தல் வைப்புத்தொகையை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி