இலங்கை தமிழ் அரசுக் கட்சியின்
தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர். ஸ்ரீதரனின் வீடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இரவு நேரத்தில் ஆயுதம் ஏந்திய குழு ஒன்று சுற்றித் திரிவதாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
இந்தக் குழுவினர் முகத்தையும் தலையையும் துணியால் மூடி தலைக்கவசம் அணிந்து மோட்டார் சைக்கிள்களில் பயணம் செய்கின்றனர்.
இதற்கான ஆதாரமாக சிசிரிவி காட்சிகள் தன்னிடம் இருப்பதாகவும் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்து பலனில்லை என்று கூறியுள்ள அவர், இதற்கு முன்பும் இதேபோன்ற முறைப்பாடு வழங்கிய பின்னர் 200 க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர் ஒரே நேரத்தில் தனது வீட்டை சோதனையிட்டதாகவும் விபரித்தார் .
இதனை பொலிஸாரிடம் தெரிவிக்காவிட்டாலும் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் பாதுகாப்பின்மை இருப்பதாகவும் சபாநாயகருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார் .