454,200 ரூபாவை இலஞ்சமாகப்
பெற்றதாக கூறப்படும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகர் மற்றும் கான்ஸ்டபிளின் பிணை கோரிக்கையை நிராகரித்த கொழும்பு பிரதான நீதிவான் திலின கமகே, சந்தேக நபர்களை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறுஇன்று (09) உத்தரவிட்டுள்ளார்.
சந்தேக நபர்கள் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு கடந்த ஆறாம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட இலஞ்சப் பணத்தை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.