அத்துருகிரியவில் சுட்டுக் கொல்லப்பட்ட
கிளப் வசந்த என்றழைக்கப்படும் வசந்த சுரேந்திர பெரேராவின் சடலமும் உயிரிழந்த மற்றையவரின் சடலமும் பிரேத பரிசோதனையின் பின்னர் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் வைத்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக ஹோமாகம ஆதார வைத்தியசாலை தெரிவித்துள்ளது.
இதனையடுத்தெ கிளப் வசந்த என்ற சுரேந்திர வசந்த பெரேராவின் சடலம் பொரளை பிரதேசத்தில் உள்ள தனியார் மலர்ச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன் மற்றையவரின் உடலை அவரது வீட்டுக்கு உறவினர்கள் எடுத்துச் சென்றனர்.
துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த பிரபல பாடகர் கே சுஜீவ தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பொதுப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதுடன், சுரேந்திர வசந்த பெரேராவின் மனைவி களுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஹோமாகம ஆதார வைத்தியசாலையின் விசேட சட்ட வைத்திய அதிகாரி பிரனீத் செனவிரத்ன சடலங்களின் பிரேத பரிசோதனையை இன்று (09) ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் மேற்கொண்டார்.