நேற்று (09) நள்ளிரவு முதல் ரயில்
நிலைய அதிபர்கள் மற்றும் ரயில் கட்டுப்பாட்டாளர்கள் தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்
இதன் காரணமாக, இயக்குவதற்கு தயார்படுத்தப்பட்ட தபால் ரயில்களை ரயில்வே திணைக்களம் இரத்துச் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும் இன்றைய (10) தினம் சேவையில் ஈடுபடவுள்ள சில அலுவலக ரயில்களை இயக்குவதற்கு தேவையான அதிகாரிகளை நியமிக்க ரயில்வே திணைக்களம் திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.
இந்தப் பணிப்புறக்கணிப்பு காரணமாக, இன்று (10) இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களில் ரயில் சீசன் டிக்கெற்டுகளை போக்குவரத்துக்கு பயன்படுத்துவதற்கு தேவையான வசதிகளை போக்குவரத்து அமைச்சு ஏற்படுத்தி கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.