எந்தவொரு சந்தர்ப்பத்தையும்
தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தும் சந்தர்ப்பவாதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஜனாதிபதி மற்றும் அவரது ஆதரவாளர்களின் நடவடிக்கைகள் காரணமாகவே ஜனாதிபதி தேர்தல் நடைபெறுமா என்ற சந்தேகம் ஏற்பட்டதாகவும் முஜிபுர் ரஹ்மான் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
தேர்தல் ஒத்திவைப்பு பற்றி பேசப்பட்டதைத் தொடர்ந்து, அது தொடர்பில் வியாக்கியானம் கோரி நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது, இது 'ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம்' எனவும் அவர் விவரித்தார்.
இந்தச் சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாகப் பயன்படுத்த ஜனாதிபதி முயற்சித்தார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
படகு எந்தப் பக்கம் கவிழ்ந்தாலும் அதில் ஏறி வெளியேறவே ஜனாதிபதி முயற்சிக்கிறார்.
ஜனாதிபதி பதவிக்காலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்ற விவாதம் நடந்தபோது, அதன் தொடர்ச்சியாக இந்த மனு நீதிமன்றத்துக்கு வந்தது.
ஆனால் அந்த மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்தது.
ஜனாதிபதியின் பதவிக் காலம் குறித்து அரசியலமைப்புச் சட்டத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
"வாக்களிக்க வேண்டாம் என்று மக்களை நம்பவைக்கும் ஒரு பெரிய நடவடிக்கை நடக்கிறது என்றும் முஜிபுர் ரஹ்மான் கூறினார்.