உள்ளூராட்சி மன்றங்களின்
அபிவிருத்தியை மேற்பார்வையிடும் வகையில் வழங்கப்பட்ட நியமனங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தென் மாகாண ஆளுநர் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளார்.
இதனை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் தென் மாகாண ஆளுநர் அறிவித்துள்ள போதிலும், ஏனைய ஆளுநர்கள் இதுவரை அறிவிக்கவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.