வர்த்தகர் விரஞ்சித் தம்புகலவின்
வங்கிக் கணக்கில் 2018ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை 4,757 மில்லியன் ரூபா வரவு வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று (10) தெரிய வந்துள்ளது.
சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் இன்று நீதிமன்றில் கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நபர் ஒருவரின் 70 இலட்சம் ரூபாவை மோசடி செய்ததாக வர்த்தகர் விரஞ்சித் தம்புகலவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு கொழும்பு மேலதிக நீதிவான் பவித்ரா சஞ்சீவனி பத்திராஜா முன்னிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இவ்வாறு தெரிவிக்கப்பட்டது