அநுராதபுரம் ருவன்வெலி
மஹாசய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய 55 வயதுடைய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உடமல்வ பொலிஸ் பிரிவின் ருவன்வெலி உப பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் அநுராதபுரம் புலங்குளம் வத்தையைச் சேர்ந்த சார்ஜன்ட் ஜயதிலக (55) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த சார்ஜன்ட் இன்று ரவன்வெலி சயா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இன்று (11) அதிகாலை ஐந்து மணியளவில் இந்த சார்ஜன்ட் பொலிஸ் நிலையத்தில் இரத்த வெள்ளத்தில் கிடந்ததாக உடமல்வ பொலிஸ் நிலைய பிரதான பரிசோதகர் சன்ன வதேவா தெரிவித்தார்.
இது தற்கொலையா அல்லது துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமா என்பது தொடர்பான மேலதிக விசாரணைகளை உடமலுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.