நுவரெலியா டொப்பாஸ் பகுதி
வீதியில் பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காயமடைந்த 40 பேர் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்களில் ஐந்து பெண்களும் 35 ஆண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நுவரெலியா பிரதேசத்தில் உள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் பணிபுரியும் ஊழியர்கள் நுவரெலியாவில் இருந்து திருகோணமலைக்கு வருடாந்த பயணத்தை மேற்கொண்டிருந்த போதே இந்த விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
பஸ்ஸின் பிரேக் திடீரென செயலிழந்து மேல் வீதியில் இருந்து கீழ் வீதியின. வளைவு பகுதியில் கவிழ்ந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.