ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்
உறுப்பினர்களான லலித் எல்லாவல மற்றும் கலாநிதி திலக் ராஜபக்க்ஷ ஆகியோர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்தனர்.
டலஸ் அழகப்பெரும தலைமையிலான சன்சந்த மக்கள் கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தி சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதாகவும், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித்தின் வெற்றிக்காக பாடுபடப் போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 225 எம்.பி.க்களும் திருடர்கள் அல்ல என தெரிவித்த லலித் எல்லாவல, 'நாங்கள் திருடர்கள் அல்ல' என புதிய கூட்டணியையும் ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்தார்.