1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

குடிவரவு - குடியகல்வு திணைக்களத்துக்கு

போலியான தகவல்களைச் சமர்ப்பித்து வெளிநாட்டு கடவுச்சீட்டை பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராக கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் இன்று (11) வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பிணையில் உள்ள டயனகமகே, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகிய பின்னர், கொழும்பு மேலதிக நீதிவான் ஹர்ஷன கெகுலுவெல குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு ஆகஸ்ட் முதலாம்  திகதி வழக்குரைஞர்களுக்கிடையில் முறைப்பாடுகளைப் பதிவு செய்து குற்றச்சாட்டுகளை வாசிக்குமாறு அறிவித்தார்.
 
பிரதம நீதிவான் இன்று விடுமுறையில் இருந்ததால் குற்றச்சாட்டுகள் மீதான வாசிப்பு ஒத்திவைக்கப்பட்டது.
 
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட குற்றஞ்சாட்டப்பட்டவரின் அரச கடவுச்சீட்டை நீதிமன்றப் பாதுகாப்பில் வைக்குமாறும் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி