மூன்று வருட கடூழியச்
சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவின் பிணை மனுவை எதிர்வரும் 15 ஆம் பரிசீலிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (11) தீர்மானித்துள்ளது.
இந்த பிணை மனு விண்ணப்பத்துக்கு எதிராக சட்டமா அதிபர் எழுத்துமூல அறிக்கையை இன்று தாக்கல் செய்துள்ளார்.
இளைஞர் ஒருவரைக. கடத்திச் சென்றது தொடர்பான நீண்ட விசாரணையின் பின்னர், கொழும்பு மேல் நீதிமன்றம் இவருக்கு மூன்று வருட கடூழிய தண்டனை விதித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து அவரது சட்டத்தரணிகள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.