மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்கு
உட்பட்ட சாமிமலை ஹோல்டன் தோட்டத்தில் 4 வயது சிறுமிக்கு மது அருந்தக் கொடுத்த குற்றச்சாட்டில் சிறுமியின்தாய் மாமன் முறையான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்து மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவிக்கையில்.
குழந்தையின் தாய் குடும்ப வறுமை காரணமாக 18 மாதங்களுக்கு முன்பு சவூதி அரேபியாவுக்கு வேலைக்காக சென்றுள்ளார்.
இவர்கள் உலப்பனை பகுதியில் வசிப்பவர்கள் எனவும் தாய் சவூதி அரேபியா சென்ற போது 9 வயது மகன் 4 வயது மகளையும் சாமிமலை பகுதியில் உள்ள ஹோல்ட்ன் தோட்டத்தில் உள்ள தனது தாய் வீட்டில் விட்டு சென்றுள்ளார்.
குறித்த பிள்ளைகள் அவர்களின் பாட்டி வீட்டில் இருக்கும்போது தாய் மாமன் அடிக்கடி பிள்ளைகளைப் பார்க்க வந்தபோதே இவ்வாறு மது பருக்கி உள்ளார்.
சம்பவம் தொடர்பில் சிறுமியின் 9 வயதுடைய சகோதரன. உலப்பனை பொலிஸாருக்கு வழங்கிய தகவலில் நேற்று மாலை மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமாரவின் பணிப்புரையின் பேரில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நேற்று சந்தே நபரை ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது நீதவான் சந்தேக நபரை எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.