கொலை உள்ளிட்ட பல்வேறு குற்றச்
செயல்களில் ஈடுபட்டு துபாயில் பதுங்கியிருந்த இரு குற்றவாளிகளை கட்டுநாயக்கவுக்கு இன்று (12) காலை அழைத்து வரப்பட்டனர்.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் நான்கு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று இந்த சந்தேக நபர்களை அழைத்து வந்துள்ளது.
அனுகேகொட பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடைய மற்றும் மட்டக்குளி, சமித்புர பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இரண்டு குற்றவாளிகளே இவ்வாறு அழைத்து வரப்பட்டனர்.