கைது செய்யப்பட்ட சந்தேக
நபர்களின் புகைப்படங்களை ஊடகங்களுக்கு அம்பலப்படுத்த வேண்டாம் என பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் புதிய சுற்று நிரூபத்தை வெளியிட்டுள்ளார்.
பொலிஸாரினால் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் தொடர்பான தகவல்களை ஊடகங்களுக்கு எவ்வாறு வெளியிடுவது என்பது தொடர்பில் பொலிஸ் மா அதிபரின் சுற்று நிரூபங்கள் மூலம் அதிகாரிகளுக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.
இந்நிலையை மேலும் கட்டுப்படுத்தும் வகையில் அனைத்து பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டு இந்த புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.