1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

புஸ்ஸ உயர்பாதுகாப்பு சிறைச்சாலையின்

உதவி சிறைச்சாலை அத்தியட்சகர் ஒருவரை அச்சுறுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்ததாக சிறைச்சாலை ஆணையாளர்,  ஊடகப் பேச்சாளர் காமினி பி.திஸாநாயக்க தெரிவித்தார்.

நேற்று முன்தினம் (11) மாலை 5.00 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், வீட்டில் தங்கியிருந்த அத்தியட்சகரின் தந்தைக்கு தொலைபேசி அழைப்பு விடுத்து, துபாயில் உள்ள ஹீனடியவின் குழுவைச் சேர்ந்தவர்கள் என தம்மை அவர்கள்  கூறியதாக திஸாநாயக்க தெரிவித்தார். 
 
புஸ்ஸா சிறைச்சாலையில் உள்ள உதவி அத்தியட்சகரின் தேடுதல் நடவடிக்கைகளை நிறுத்துமாறு இவர்கள் அச்சுறுத்தினார்.
 
அண்மையில் புஸ்ஸ சிறைச்சாலையின் விசேட பிரிவில் இருந்து பல தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டமை தொடர்பில் சிறைச்சாலையில் உள்ள பாதாள உலகக் குழு உறுப்பினர்களிடம் அத்தியட்சகர்  விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும்  சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார். . 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி