1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

வீரகெட்டிய மொராய பிரதேசத்தில்

இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மொராய பிரதேசத்தில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போது இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
உயிரிழந்தவர் வீரகெட்டிய மொரய பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
 
மோதலில் மேலும் 5 பேர் காயமடைந்தனர்.
 
இவர்கள் தங்காலை மற்றும் எம்பிலிபிட்டிய வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களது நிலைமை மோசமாக இல்லை எனவும் வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி