ரம்புக்கன புவக்மோட்டே பிரதேசத்தில்
உள்ள விஹாரை ஒன்றைஉடைத்து தொல்பொருள் பெறுமதியான புத்தர் சிலையை திருடியதாகக் கூறப்படும் தெரணமகா உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விலை மதிப்பற்றதாக கூறப்படும் இந்த புத்தர் சிலை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்களும் புத்தர் சிலையும் கண்டுபிடிக்கப்பட்டதாக ரம்புக்கனை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.