மத்திய நைஜீரியா பிராந்தியத்தில் பாடசாலைக் கட்டிடம் ஒன்று இடிந்து வீழ்ந்துள்ளது.
இந்த விபத்தில் 22 பிள்ளைகள் உயிரிழந்ததாகவும் 130க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சம்பவத்தின்போது குறித்த பாடசாலையில் 1,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த 3 நாட்களுக்கும் மேலாக பெய்த மழையே இந்த விபத்துக்கு காரணம் என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.