கிளப் வசந்த எனப்படும் சுரேந்திர வசந்த
பெரேராவின் இறுதிக் கிரியைகள் இன்று (13) மாலை இடம்பெற்றன.
கடந்த 8ஆம் திகதி அதுருகிரிய பிரதேசத்தில் பச்சை குத்தும் நிலையமொன்றை திறக்கச் சென்ற கிளப் வசந்தா எனப்படும் சுரேந்திர வசந்த பெரேரா மற்றும் மற்றுமொரு நபரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் கிளப் வசந்தவின் உடல் ஜயரத்ன மலர்சாலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மாலை பொரளை பொது மயானத்தில் இறுதிக்கிரியைகளை செய்தனர்.
பாதுகாப்புக்காக பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் அங்கு வந்திருந்தனர்.