1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில்

போட்டியிடுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் வலியுறுத்தப்படும் என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளரை முன்வைப்பது குறித்து தமது கட்சி இன்னும் தீர்மானிக்கவில்லை எனவும், ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கு பொருத்தமான நபர் தமது கட்சியில் இல்லை எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
 
தற்போதைய ஜனாதிபதி  ரணில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் அவரது வெற்றிக்காக தன்னை அர்ப்பணிப்பதாகவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.
 
கம்பஹா உடுகம்பொல பிரதேசத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகள் மத்தியில் உரையாற்றும் போதே அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி