திருகோணமலை வர்த்தகர் ஒருவர்
கெப் வாகனத்தில் கடத்தப்பட்டு தீ வைத்துக் கொல்லப்பட்டுள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலை அலஸ் தோட்ட பகுதியை சேர்ந்த 41 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தனிப்பட்ட காரணத்துக்காக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாகவும் சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இரு சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களையும் கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.