அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக நடிகர் கருணாஸ் தலைமையில் இயங்கும் முக்குலத்தோர் புலிப்படை அறிவித்துள்ளது.
கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்று எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றவர் கருணாஸ்.
தற்போது முக்குலத்தோர் இனத்துக்கு அதிமுக அரசு எதுவும் செய்யவில்லை என்று கூறி அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாகவும், தனித்து போட்டியிடவுள்ளதாகவும் கருணாஸ் கூறியுள்ளார்.