எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அவர் பொது எதிர்க்கட்சி வேட்பாளராக களமிறங்குவார் என்று அரசியல் அரங்கில் பரவிய வதந்திகளால் உலகப் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரரும் சட்டத்தரணியுமான குமார் சங்கக்காராவுக்கு எதிராக ஊடகங்கள் ஒரு மோசமான பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளதா என்று சில சமூக ஊடக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அரசாங்கத்தின் 'சிலுமின' செய்தித்தாளில் நேற்று வெளியிடப்பட்ட சர்ச்சைக்குரிய கட்டுரை குறித்து அவர் கருத்து தெரிவித்தார்.
'உலக புகழ்பெற்ற விளையாட்டு வீரரின் மனைவி எப்படி கோடிக்கணக்கான ரூபாயை விழுங்கினார்' என்ற தலைப்பில் இந்த கட்டுரை பிரசுரமாகி இருந்தது
இதற்கிடையில், குமார் சங்கக்காரவின் மனைவி யேஹாலி சங்கக்கார இந்த செய்தி குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,'சிலுமின' கூறிய குற்றச்சாட்டையுயும் தொடர்புடைய செய்தியையும் கடுமையாக மறுத்துள்ளார்.
சிகிரியா பகுதியில் சட்டவிரோதமாக மதிப்புமிக்க நிலங்கள் கையகப்படுத்தப்பட்டதாக வெளியான தகவல்கள் தொடர்பாக பிரபல கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்கார மற்றும் அவரது மனைவி யேஹாலி சங்கக்கார ஆகியோருக்கு காணி ஆணையாளரால் நேற்று பிற்பகல் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கடிதத்திற்கு பதிலளித்துள்ள யேஹாலி சங்கக்கார, நிலங்களை கொள்வனவு செய்தது அபிவிருத்தி வேலைகளுக்காக என்று கூறியுள்ளார்.
அவர்கள் காணி ஆணையாளருக்கு அனுப்பிய கடிதத்திற்கு பின்வருமாறு பதில் அனுப்பப்பட்டுள்ளது.
இதற்கு பதிலளிக்கும் விதமாக காணி ஆணையாளர் கீர்த்தி கமகே குமார் சங்கக்கார மற்றும் யேஹாலி சங்கக்காரவுக்கு பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.
பிரச்சினையைத் தீர்க்க தம்புல்ல பிரதேச செயலாளருடன் கலந்தாலோசித்து தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய மாகாண ஆளுநர், வழக்கறிஞர் லலித் யூ கமகே கூறுகையில், காணிகளை வாங்கியது குறித்து உடனடியாக விசாரணை செய்து பத்திரங்களை ரத்து செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
சர்ச்சையை ஏற்படுத்திய காணி குறைந்த வருமானம் ஈட்டுபவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய அரசு நிலமாகும்.