ஏப்ரல் 21, 2019 அன்று நடந்த மிருகத்தனமான உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் 268 உயிர்கள் காவுகொள்ளப்பட்டன.
சர்வதேச செய்திகளின்படி, வெளிநாடுகளில் உள்ள இலங்கை சமூகமும் கறுப்பு ஞாயிறு நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தது, இது உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் நிரந்தரமாக ஊனமுற்ற மக்களுக்கு நீதி கோருவதற்காக சர்வதேச மட்டத்தில் ஏற்பாடு செய்யும்படி இலங்கை மறைமாவட்டத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது.
இத்தாலியின் மிலான் நகரில் உள்ள Santuario di San Bernardino தேவாலயத்தில், உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இத்தாலி வாழ் கிறிஸ்தவ மக்களின் சார்பாக வருத்தத்தையும் அதிருப்தியையும் தெரிவிக்கும் வகையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
(புகைப்படம்: சுமுடு மத்துமாராச்சி - மிலான் இத்தாலி)
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் நீதி வழங்க வேண்டும் என்று கோரி பிரான்சில் மக்கள் சதுக்கத்திற்கு அருகே போராட்டங்களும் நடந்துள்ளன.