தோட்டத் தொழிலாளர்களின் நாள் சம்பளத்தை ரூ.1000க அங்கீகரிக்கும் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
சம்பளக் கட்டுப்பாட்டுச் சபை கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கேற்ப தொழில் அமைச்சின் செயலாளரினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதுடன் இம்மாதம் 5ம் திகதியிலிருந்து இது அமுலுக்கு வருகிறது.
இந்த வர்த்தமானியில் குறிப்பிட்டுள்ளவாறு அடிப்படைச் சம்பளமாக 900 ரூபாவாகவும் வரவு செலவு அறிக்கையில் நிவாரணக் கொடுப்பனவாக 100 ரூபாவும் சேர்த்து நாள் சம்பளமாக 1000 ரூபா வழங்கப்படவிருக்கிறது.