இலங்கையில் புர்கா மற்றும் நிகாப் மீது தடை விதிக்க மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து பாகிஸ்தான் தனது கவலையை தெரிவித்துள்ளது
இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் சாத் கட்டக் இந்த விடயம் தொடர்பாக தனது ட்விட்டரில் தெரிவித்திருப்பதாவது,
இலங்கையில் நிகாப் மீதான தடை உலகெங்கிலும் உள்ள சாதாரண இலங்கை முஸ்லிம்கள் மற்றும் உலக முஸ்லிம்களின் உணர்வுகளுக்கு காயத்தை ஏற்படுத்தும்.
கொரோனா வைரஸ் தொற்றினால் நாடு எதிர்கொள்ளும் சவால்களுக்கு மத்தியில் இது பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கும் என தெரிவித்துள்ளார்.