ஆயிரம் ரூபா வேதன உயர்வு விடயத்தில் அரசாங்கம் இரட்டை நாடகமாடுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் குற்றம் சுமத்தியுள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
மலையகத்தின் அனைத்து தொழிற்சங்களும் ஒன்றிணைந்து, தொழிற்சங்க சம்மேளனத்தை உருவாக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும் என்றும் அவர் யோசனை முன்வைத்துள்ளார்.