ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டாரவுக்கு எதிராக அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளர்
மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டாரவினால் கடந்த 17ஆம் திகதி தெரிவிக்கப்பட்ட கருத்தொன்று தொடர்பிலேயே இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.