ஸ்பெயின் நாட்டில் தீராத நோயால் நீண்ட நாட்கள் அவதிப்படுவோர் நிலை மிகவும் மோசமாக உள்ளதால் அவர்கள் மருத்துவ உதவியுடன் வாழ்க்கை நடத்துவது போராட்டமாகவே இருக்கிறது.
எனவே இதுபோன்றவர்களை கருணை கொலை செய்ய அனுமதிக்கும் சட்டம் ஸ்பெயின் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது.
எதிர்வரும் ஜூன் மாதம் முதல் இந்த கருணை கொலை சட்டம் அமுலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இடதுசாரி கூட்டணி அரசு இந்த சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதற்கு வலதுசாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அந்த நாட்டின் நாடாளுமன்றத்தின் கீழ் சபையில் கொண்டு வரப்பட்ட இந்த சட்டமூலத்துக்கு ஆதரவாக 202 உறுப்பினர்கள் வாக்களித்ததுடன், எதிராக 140 வாக்குகள் அளிக்கப்பட்டு சட்டம் நிறைவேற்றப்பட்டது.