20வது திருத்த சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமாரின் கட்சி உறுப்புரிமையை
இரத்து செய்ய மலையக மக்கள் முன்னணி நடவடிக்கை எடுத்துள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் மலையக மக்கள் முன்னணி, மலையக தொழிலாளர் முன்னணி ஆகியவற்றில் இருந்தும் வகித்த பதவிகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார் என்றும் முன்னணியின் மத்தியக் குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் முன்னணியின் செயலாளர் நாயகம் சங்கரன் விஜயசந்திரன் தெரிவித்தார்.
வி.ராதாகிருஷ்ணனின் தலைமைத்துவத்திலான மலையக மக்கள் முன்னியின் மத்தியக் குழுக் கூட்டம், நேற்று மாலை நடைபெற்ற நிலையிலேயே, இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.