கிளிநொச்சி உருத்திரீஸ்வரர் கோவில் வளாகத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அகழ்வுப் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று (22), சுழற்சி முறையிலான போராட்டம் ஆரம்பமானது.
உருத்தீரீஸ்வரர் கோவில் வளாகத்தில், இன்று, குறித்த அகழ்வுப் பணிகள் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, இன்று காலை முதல் குறித்த வளாகத்தில் எதிர்ப்புத் தெரிவித்து, சுழற்சி முறையிலான போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இந்தப் போராட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை, மதத் தலைவர்கள், பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.