பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி தொடர்பான வழக்கு, இன்று பருத்தித்துறை நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
வழக்கின் பிரதிவாதிகள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன், வி.மணிவண்ணன், வி.திருக்குமரன், கே.சயந்தன் உள்ளிட்டோர் ஆஜராகியிருந்தனர். வழக்காளிகள் சார்பில் மாதினி விக்னேஸ்வரன், ருவான் குணசேகர, மாதவ தென்னக்கோன் முன்னிலையாகியிருந்தனர்.
இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனும் மன்றில் முன்னிலையாகியிருந்தார்.
மேலும் குறித்த வழக்கானது கட்டளைக்காக மே மாதம் மூன்றாம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.