ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இரத்தாகியுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
உறுப்பினர் பதவி இரத்தாகியுள்ளமை தொடர்பில் நாடாளுமன்ற செயலாளர் நாயகத்தினால் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் குற்றவாளியான ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தம்மை நீக்குவதற்கு எதிராக ரஞ்சன் ராமநாயக்கவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் விசாரணையின்றி நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.